கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சேவல் சண்டை வைத்து சூதாட்டம்: 15 பேர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சேவல் சண்டை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர். கொத்தகொண்டப்பள்ளி கிராமத்தில் சேவல் சண்டை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து சுமார் 75 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து மத்தகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: