உண்மையை பேசியதற்காக எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்: காங். பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேச்சு

டெல்லி: நாட்டுக்காக காங்கிரஸ் கட்சியினர் தங்கள் உயிரை தியாகம் செய்ய தயாராக உள்ளதாக டெல்லியில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். தொடர்ந்து பேசிய அவர், மன்னிப்பு கேட்பதற்கு என் பெயர் ராகுல் சாவர்கர் அல்ல ராகுல் காந்தி என்று பேசினார். பிரதமர் நரேந்திர மோடி தான் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மோடி அரசு இந்தியாவின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டது எனவும் அவர் தெரிவித்தார். உண்மையை பேசியதற்காக எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பினர்.

Related Stories: