புதுக்கோட்டை, : தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் மாவட்டத்தில் உள்ள துப்பாக்கிகளை உரிமையாளர்கள் அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைத்து வருகின்றனர்.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டகளாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27ம் தேதி முதல் கட்டமாகவும், இரண்டாம் கட்டமாக 30ம் தேதியும் நடைபெறுகிறது. குறிப்பாக ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி உள்ளிட்டவற்றிக்கு மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.