உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை உரிய காலத்தில் நடத்தி உள்ளாட்சி கட்டமைப்பை பலப்படுத்தியது திமுக: ஸ்டாலின் புகழாரம்

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை உரிய காலத்தில் நடத்தி உள்ளாட்சி கட்டமைப்பை பலப்படுத்தியது திமுக ஆட்சி என் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் கிராம கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தேவையான நிதியை ஒதுக்க முன்னுரிமை அளிக்கப்பட்டது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊராட்சியில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதும் திமுக ஆட்சியில் தான் என்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் மக்களின் பேராதரவு திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: