சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கத்துக்கு நீராவி என்ஜின் ரயில் இயக்கப்பட்டுள்ளது. சென்னையில் 1855ம் ஆண்டு முதல் 1909ம் ஆண்டு வரை நீராவி ரயில் என்ஜின் இயக்கப்பட்டது. நீராவி ரயில் இன்ஜினில் பயணிக்க சிறுவர்களுக்கு ரூபாய் 300ம், பெரியவர்களுக்கு ரூபாய் 500ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீராவி ரயில் என்ஜினில் பயணிக்க வெளிநாட்டவருக்கு 1000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.