திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 5 வது நாளாக நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் ஆயிரத்து 25 பேர் மனு தாக்கல் செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் ஊரக பகுதி உள்ளாட்சி தேர்தல் என்பது முதல் கட்டமாக வரும்27 ந்தேதி திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் மற்றும் மன்னார்குடி ஆகிய 5 ஒன்றியங்களுக்கும் , 2ம் கட்டமாக 30 ந் தேதி நீடாமங்கலம், வலங்கைமான், குடவாசல், கொரடாச்சேரி மற்றும் நன்னிலம் ஆகிய5 ஒன்றியங்களுக்கும் என தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி இதற்கான வேட்புமனு தாக்கல் என்பது கடந்த 9ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி மாவட்டத்தில் மொத்தமுள்ள 3 ஆயிரத்து 804 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.