வத்தலக்குண்டு: திருச்சியை சேர்ந்த கணவன், மனைவி, மகன், மகள் ஆகிய 4 பேர் கொடைரோட்டில் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை அடுத்த உறையூர், காவேரி நகரை சேர்ந்தவர் உத்திராபதி (50), தொழிலதிபர். இவரது மனைவி சங்கீதா (43). மகள் அபினயஸ்ரீ (15), மகன் ஆகாஷ் (12). கடந்த 2 நாட்களுக்கு முன்பு உத்திராபதி மனைவி, மகன், மகள் ஆகியோருடன், ரயில் மூலம் திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடுக்கு வந்தார். அங்கிருந்து அனைவரும் பஸ்சில் கொடைக்கானல் சென்றனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு, நேற்று முன்தினம் இரவு மீண்டும் கொடைரோடு ரயில் நிலையம் வந்தனர்.இரவு 11.30 மணியளவில் உத்திராபதி மகன் ஆகாஷின் கையையும், சங்கீதா மகள் அபினயஸ்ரீயின் கையையும் பிடித்துக் கொண்டு ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர். அப்போது சென்னை சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் கொடைரோடு ரயில் நிலையத்தை கடந்துள்ளது. இந்த ரயில் கொடைரோட்டில் நிற்காது. கொடைரோடு ரயில் நிலையத்தில் இருந்து 150 மீட்டர் தொலைவில், தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த 4 பேர் மீதும், கண்ணிமைக்கும் ேநரத்தில் ரயில் பலத்த வேகத்தில் மோதி விட்டு சென்று விட்டது.