×

வங்கதேசம், பாக். எல்லை பாதுகாப்பில் சிறப்பு கவனம்: அமித்ஷா திடீர் ஆலோசனை

புதுடெல்லி: டெல்லி லோதி சாலையில் அமைந்துள்ள எல்லை பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு அமித்ஷா நேற்று காலை வந்தார். உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அவர் இங்கு வருவது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் பிஎஸ்எப் படையின் செயல்பாடுகள் குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டது.இவற்றை கேட்டறிந்த அமித்ஷா, பாகிஸ்தான், வங்கதேச எல்லைகளிலும் தொழில்நுட்ப உதவியுடன், பாதுகாப்பை உறுதிசெய்ய எப்போதும் விழிப்புடன் இருக்க பிஎஸ்எப் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  பிஎஸ்எப் படையினர் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான 2,290 கிமீ எல்லையிலும், இந்தியா-வங்கதேசம் இடையேயான 4,096 கிமீ எல்லையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Bangladesh ,Pak ,Amit Shah , Delhi Lodhi Road, Bangladesh, Pakistan, Amit Shah
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...