புதுடெல்லி: ‘‘எனது அடுத்த டார்கெட் இலங்கையில் உள்ள நல்லை திருஞானசம்பந்தர் ஆதினம்தான்’’ என்று நித்தியானந்தா தனது வீடியோவில் கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் வரும் மீம்ஸ்களுக்கு போட்டியாக, நித்தியானந்தாவின் வீடியோக்கள் தினமும் டிரெண்டிங் ஆகி வருகிறது. அவர் பிரசங்கம் செய்து வெளியிடும் வீடியோக்கள், சிரிப்பை வரவழைப்பதால், பெருமளவில் பார்வேர்டு செய்யப்பட்டு வருகின்றன. இந்த வகையில் நித்தியானந்தா புது வீடியோவில் கூறியிருப்பதாவது:கைலாசா சிவத்தை உணர்ந்தால், உங்களுக்குள்ளும் கைலாசா உருவாகும். என் அடுத்த இலக்கு இலங்கையில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம்தான். அயோத்தியில் ராமர் கோயில் கட்டினால், இந்தியாவில் பொருளாதாரம் செழிக்கும்.