அதிகாரிகள் அதிரடி படப்பிடிப்பில் நடிகர்களிடம் போதை சோதனை

திருவனந்தபுரம்: கேரளாவில் மலையாள சினிமா படப்பிடிப்புத் தளங்களில் நுழைந்த கலால் துறை அதிகாரிகள், நடிகர்களிடம் போதைப்பொருள் சோதனை நடத்தினர். மலையாள சினிமாவில் இளம் நடிகர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாக கிடப்பதாகவும், படப்பிடிப்பு தளங்களிலும், கேரவன் வேன்களிலும் நடிகர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதாகவும், இதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படியும் அரசுக்கு மலையாள சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தது.  உரிய ஆதாரம் தந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள கலாசாரத் துறை அமைச்சர் ஏ.கே.பாலன் கூறினார்.

இந்நிலையில், கொச்சியில் நேற்று மலையாள சினிமா படப்பிடிப்பு நடந்த சில பகுதிகளில் கொச்சி கலால் துறை அதிகாரிகள் திடீரென நுழைந்து சோதனை நடத்தினர். நடிகர்களின் கேரவன் வேன்களிலும் இந்த சோதனை நடந்தது. ஆனால், போதைப்பொருள் எதுவும் சிக்கவில்லை.  இருப்பினும், இந்த சோதனை நடத்தப்பட்டதால் மலையாள சினிமா உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: