ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்ட் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 282 ரன் எடுத்துள்ளது. ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கடந்த 11ம் தேதி தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற இலங்கை அணி பேட் செய்ய முடிவு செய்தது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டத்தில் 68.1 ஓவர் மட்டுமே வீசப்பட்டதில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன் எடுத்திருந்தது. தொடர்ந்து மழை கொட்டி வருவதால் இரண்டாம் நாள் மற்றும் 3ம் நாள் ஆட்டமும் பாதிக்கப்பட்ட நிலையில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 282 ரன் எடுத்துள்ளது (91.5 ஓவர்). தனஞ்ஜெயா டிசில்வா 87 ரன், தில்ருவன் பெரேரா 6 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.
பாக். பந்துவீசில் நசீம் ஷா, அப்ரிடி தலா 2, அப்பாஸ், ஷின்வாரி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 4ம் நாள் ஆட்டம் என்பதால் இப்போட்டி டிராவில் முடிவது உறுதியாகி உள்ளது.