உலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன்: சிந்துவுக்கு ஆறுதல் வெற்றி

குவாங்ஸூ: பி.டபுள்யு.எப் உலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஏ பிரிவு லீக் சுற்றில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து ஆறுதல் வெற்றியுடன் விடைபெற்றார். முதல் 2 லீக் ஆட்டங்களிலும் அதிர்ச்சி தோல்வியடைந்து அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பறிகொடுத்த சிந்து, நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவோவுடன் மோதினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் சிந்து 21-19, 21-19 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இந்த போட்டி 42 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. ஹி பிங் ஜியாவோவுக்கு எதிராக தொடர்ந்து 4 முறை தோல்வியை சந்தித்திருந்த சிந்து, அந்த தோல்விப் பயணத்துக்கு நேற்று முற்றுப்புள்ளி வைத்தார். இருவரும் நேருக்கு நேர் மோதிய 15 போட்டிகளில் பிங் ஜியாவோ 9-6 என முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: