2.36 லட்சம் நிலுவை வழக்குகளை விசாரிக்க இன்று தேசிய லோக் அதாலத்

சென்னை: தேசிய சட்டப்பணிகள் ஆணை குழுவின் உத்தரவின்படி, ஒவ்வொரு வருடமும் மார்ச், ஜூலை, செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் 2ம் சனிக்கிழமையில் நீண்ட நாட்களாக நீதிமன்றங்களில் நிலுவையில் கிடக்கும் வழக்குகளை முடித்து வைப்பதற்காக மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் நடத்தப்படுகிறது.

அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் லோக் அதாலத் நடைபெற உள்ளது. அதில் வழக்கு தொடராமல் சட்டபணிகள் ஆணை குழுவிடம் மனு கொடுத்துள்ள தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகள், எலக்ட்ரிக், தண்ணீர் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நில அபகரிப்பு, வருவாய்த்துறை, பணம் மீட்பு, விவாகரத்தை தவிர்த்து கணவன்- மனைவிபிரச்னை என பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளன.  இதில், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் 1 லட்சத்து 66 ஆயிரத்து 735 வழக்குகள், நீதிமன்றத்தில் இன்னும் தாக்கல் செய்யாமல் மனு கொடுத்துள்ள 69 ஆயிரத்து 510 வழக்குகளும் விசாரிக்கப்பட உள்ளன.

Related Stories: