சென்னை: சென்னை மேற்கு முகப்பேர் காளமேகம் சாலையை சேர்ந்தவர் ஸ்ரீவரன் (79). இவர், தேனாம்ேபட்டை காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், கடந்த 1995ம் ஆண்டு எனது கணவர் இறந்து விட்டார். எங்களுக்கு குழந்தைகள் கிடையாது. தற்போது நான் ஆதரவற்ற நிலையில் முகப்பேரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் வசித்து வருகிறேன். இதற்கு முன்பு தேனாம்பேட்டை சேமியர்ஸ் சாலையில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தங்கி இருந்தேன். அப்போது பெண்கள் காப்பக இயக்குநர் மேரிதாமஸ், என்னிடம் ஆசைவார்த்தை கூறி, வங்கி லாக்கரில் வைத்திருந்த எனது பணம், நகை மற்றும் அண்ணாநகரில் உள்ள பல கோடி மதிப்புள்ள வீட்டின் பத்திரத்தை பிடுங்கிக் கொண்டார்.