×

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல்

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்துள்ளார். அரசின் முடிவுக்கு பிறகும் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக நளினி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 10 ஆண்டு சிறையில் இருந்த 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று நளினி தனது மனுவில் தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சரவை பரிந்துரைத்தும் ஆளுநர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என நளினி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Nalini HC ,Rajiv Gandhi , Rajiv Gandhi, Nalini
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...