வறுமை காரணமாக ரூ.20 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட திருவாரூரை சேர்ந்த 2 சிறுமிகள் மீட்பு

திருவாரூர்: வறுமை காரணமாக ரூ.20 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட திருவாரூரை சேர்ந்த 2 சிறுமிகளும் மீட்கப்பட்டனர். 2 சிறுமிகளையும் அவர்களது உறவினர் சாந்தி என்பவர் உதவியுடன் காவல்துறையினர் மீட்டனர். புளியம்பட்டி பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றிய 2 சிறுமிகளையும் போலீசார் மீட்டு கொண்டுவந்தனர். குடவாசலை சேர்ந்த பாட்டி விஜயலட்சுமி தனது பேத்திகள் 2 பேரையும் பணத்துக்காக விற்றிருந்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் சிறுமிகள் அடமானம் வைக்கப்பட்டது தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்த காளியப்பன் என்பவரின் மகள்கள் சங்கீதா, கவிதா இருவரும் அடமானம் வைக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமிகளை வளர்த்து வந்த பாட்டி விஜயலட்சுமி என்பவரிடம் சிறுமிகளை தலா ரூ.10 ஆயிரத்துக்கு அடமானம் வைத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயலட்சுமி மற்றும் சிறுமிகளை பணம் கொடுத்து வாங்கிய சகுந்தலா, கனகா உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: