மதுரை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. முதற்கட்ட விசாரணை அறிக்கை அடிப்படையில் ஏன் அடுத்தக்கட்ட விசாரணையை தொடரக்கூடாது? என்று கேள்வியெழுப்பியுள்ள நீதிமன்றம், 750 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.