சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சித்தரிக்கும் குயின் இணையதள தொடருக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குயின் இணையதள தொடர் நாளை முதல் ஒளிபரப்பாக உள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் தடைவிதிக்க கோரி ஜோசப் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.