நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.15 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. நீடாமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட எடமேலையூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான ரூ.2 லட்சத்தில் தொடங்கி ரூ.15 லட்சத்தில் முடிவடைந்துள்ளது. பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள எடமேலையூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான ஏலத்தின், பெண் வேட்பாளர்களின் கணவர்கள் பங்கேற்றுள்ளனர்.