விருதுநகர் : விருதுநகர் அருகே ரேசன் கடையில் கார்டுதாரர்களுக்கு பல நாட்கள் இருப்பில் இருந்த அரிசி விநியோகம் செய்யப்பட்டது. இதனால் கார்டுதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் அழகாபுரி ரோட்டில் செங்குன்றாபுரம் கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டில் செங்குன்றாபுரம், சமத்துவபுரம், சொக்கம்பட்டி ஆகிய 3 ரேசன் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு ஒரே ஒரு பெண் விற்பனையாளர் பணியில் உள்ளார். நேற்று முன்தினம் மாலை செங்குன்றாபுரம் ரேசன் கடையில் கார்டுதாரர்களுக்கு அரிசி விநியோகம் செய்யப்பட்டது. நிறம் குறைந்த அரிசி விநியோகம் செய்யப்பட்டதால் கார்டுதாரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரேசன் கடை விற்பனையாளரிடம் எதிர்ப்பு தெரிவித்தனர்.