புதுடெல்லி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை என்று உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து திமுக தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. திமுக கோரிக்கை குறித்து விளக்கமளித்த நீதிபதிகள் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பு தெளிவாக உள்ளதாக பதில் தெரிவித்துள்ளனர்.