பிரிட்டோரியா: உலகின் மிக பணக்கார நிறுவனம் என்ற பெருமையை ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து சவூதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனமான அராம்கோ தட்டி பறித்துவிட்டது. சவூதி அரேபியாவின் அரசு நிறுவனமான அராம்கோ 2 லட்சம் ட்ரில்லியன் டாலர் மதிப்புக்கு உயர்ந்து உலகின் முதல் பெரும் நிறுவனமாக மாறி உலகின் மிக பணக்கார நிறுவனங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. சவூதி அரசால் நிர்வகிக்கப்படும் இந்த நிறுவனம் பெட்ரோலியம் மற்றும் எரிப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. முதன் முறையாக பங்கு வர்த்தகம் மூலம் பெரும் நிதியை திரட்டியத்தின் மூலமாக அராம்கோ இந்த முதலிடத்தை அடைந்துள்ளது. ஆப்பிளின் வர்த்தக முதலீடு ஒரு லட்சம் கோடி டாலருக்கும் அதிகமாக இருக்கும் நிலையில் பங்கு சந்தை வரவு மூலம் அராம்கோவின் வர்த்தக மதிப்பு சுமார் 2 லட்சம் கோடி டாலராக அதிகரித்துவிட்டது.