இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஈரோடு மகளிர் நீதிமன்றம் உத்தரவு

ஈரோடு: இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்தாண்டில் ஈரோடு அருகே சித்தோட்டில் கார்த்திகா என்ற பெண்ணை மணிகண்டன் என்பவர் கழுத்தை நெரித்து கொலை செய்தார். இந்த நிலையில், கொலை செய்த மணிகண்டனுக்கு அயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கார்திகாவின் பெண் குழந்தைக்கு மணிகண்டனிடம் வசூலிக்கும் அபராதத் தொகையுடன் ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: