சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட மறுப்பு தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்துள்ளது. உரிய ஆவணங்களுடன் மனுத்தாக்கல் செய்யப்படாததால் தள்ளுபடி செய்யப்படடுவதாக உயர்நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. இந்நிலையில், மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க சென்னை ஐஐடி நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.