×

காஷ்மீர் எல்லையில் பாக். துப்பாக்கிச்சூடுஇரண்டு பேர் காயம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச், பாரமுல்லா மற்றும் கதுவா மாவட்டங்களில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் பொதுமக்கள் 2 பேர் காயமடைந்தனர்.    இதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், “காலை 11.30 மணிக்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். சிறிய ஆயுதங்கள், மார்டர் ரக குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. பூஞ்ச் மாவட்டத்தில் ஷாபூர், கிர்னி மற்றும் கஸ்பாவில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதேபோல், புதனன்று நள்ளிரவு 12.10 மணி முதல் நள்ளிரவு 2.15 மணி வரை மெந்தார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் முகமது சலீம் (24), தன்வீர் அக்தர் (13) ஆகியோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் எல்லையோரத்தில் இருந்த 10 வீடுகளில் சிறிதளவில் சேதம் ஏற்பட்டது,” என்றார்.



Tags : border ,Kashmir ,Pak , Kashmir border, gunfire, Pakistan
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது