தண்டையார்பேட்டை: பூக்கடை குடோன் தெருவில் துணிக்கடை நடத்தி வருபவர் தல்லாராம் (50). இவரது கடையில் 5 பேர் வேலை செய்து வருகின்றனர். இவர், நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டை உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, 8 லட்சம் ரொக்கம், 1 லட்சம் மதிப்புள்ள துணிகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து பூக்கடை குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.