தண்டையார்பேட்டை: கொடுங்கையூர் லட்சுமி நகரை சேர்ந்தவர் இளையராஜா (40). கட்டிட மேஸ்திரி. இவர், நேற்று முன்தினம் கொடுங்கையூர் எம்ஆர்.நகர் வடிவுடையம்மன் கோயில் தெருவில் உள்ள முகைதீன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கட்டிட பணியில் ஈடுபட்டார். இவருடன் 5க்கும் மேற்பட்டோர் வேலை செய்துள்ளனர். அப்போது, சிமென்ட் கலவை தயார்செய்ய தண்ணீர் தேவைப்பட்டதால், இளையராஜா அங்கிருந்த மின் மோட்டாரை இயக்கியபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார். அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.