சென்னை: சோழிங்கநல்லூர் ஜீவன் ராமன் நகரை சேர்ந்த ஜங்கா பகதூர் தாபா (53), செக்யூரிட்டி. இவர், நேற்று பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து மேல்மருவத்தூர் செல்லும் மின்சார ரயிலில் ஏறினார். கூட்டம் அதிகமாக இருந்ததால், படியில் தொங்கியபடி பயணித்தபோது, ரயில் புறப்பட்ட சில நொடிகளில் தவறி நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையில் விழுந்து உடல் நசுங்கி உயிரிழந்தார்.