நாமகிரிப்பேட்டை: நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த தொப்பம்பட்டி ஜேடர்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (50). இவர் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரது மகன் குமரன் (12). 7ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த வாரம் காய்ச்சலுக்காக நாமகிரிப்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.