×

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு : முதல்வரை சந்தித்த பின் கருணாஸ் பேட்டி

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளதாக கருணாஸ் கூறினார். முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் முதல்வர் பழனிசாமியை நேற்று சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:முதல்வரை சந்தித்து உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தேன். தனிமனித செல்வாக்கு அடிப்படையில் அதிமுக கூட்டணியே அதிக இடத்தில் வெற்றி பெறும். தேவைப்பட்டால் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.

எங்களுக்கு தேவையான இடங்கள் குறித்து துணை முதல்வரிடம் ஆலோசிப்பேன். உள்ளாட்சி தலைவர் பதவியை ஏலம் விடுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. அரசியல் வேறு, விசுவாசம் வேறு. நான் சசிகலா ஆதரவாளர் என்பது முதலமைச்சருக்கே தெரியும். சசிகலா வெளியே வந்த பின்னர் அடுத்தகட்ட முடிவு எடுப்பேன். இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா இந்திய பன்முகத்தன்மைக்கு எதிரானது.

Tags : Meeting CM ,election ,AIADMK ,Karunas ,CM , AIADMK , local election, Interview,Karunas after meeting CM
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...