துணை முதல்வர் ஓபிஎஸ்சுடன் மத்திய ஹட்கோ அதிகாரிகள் சந்திப்பு

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி கழகத்தின் (ஹட்கோ) பெருநிறுவன திட்டங்கள் இயக்குநர் எம்.நாகராஜ், செயல் இயக்குநர் குகன், ஹட்கோ சென்னை பொது மேலாளர் திட்டங்கள் எஸ்.தங்கராஜ் ஆகியோர் சந்தித்து பேசினார். அப்போது, தமிழக வீட்டுவசதி திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி கழகத்தின் மூலம் வழங்குவது குறித்து கலந்தாலோசனை மேற்கொண்டனர். இந்த சந்திப்பின்போது தலைமை செயலாளர் சண்முகம், நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழகத்தின் முதன்மை செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி விஜயன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: