×

சுவாமிநாதன் அறிக்கையில் 200 பரிந்துரைகள் ஏற்பு

புதுடெல்லி: மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களவையில் நேற்று கூறியதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 260 பணிகள் நடக்கின்றன. இதில், 164 பணிகள் விவசாயம் தொடர்பானவை. விவசாயிகள் பற்றி சுவாமிநாதன் குழு தாக்கல் செய்த 201 பரிந்துரைகளில், 200 பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. இவற்றுள் விவசாய உற்பத்திக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையை 50 சதவீதம் கூடுதலாக வழங்க வேண்டும் என்பதும் ஒன்று. 22 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Swaminathan , Swaminathan
× RELATED சென்னை நகைக் கடையில் ரூ.28 கோடி மோசடி:...