×

2 லட்சம் வரை விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்: ஜார்கண்டில் ராகுல்காந்தி வாக்குறுதி

ராஜ்மகால்: ஜார்கண்டின்  ராஜ்மகாலில் ஜார்கண்ட் முக்தி மோர்சா வேட்பாளரை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். ராகுல்காந்தி பேசியதாவது: காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றால், நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு 2,500ஐ விவசாயிகள் பெறுவார்கள். மேலும் 2 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையிலான அரசு நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக 2500 வழங்கி வருகின்றது. நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் ஜார்கண்ட் விவசாயிகளுக்கும் இதே விலை வழங்கப்படும். காங்கிரஸ் கட்சியானது எப்போதும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும். பாஜ அரசால் நாட்டில் வேலைவாய்ப்பின்மை 45 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.



Tags : Jharkhand ,Rahul Gandhi , Agricultural Loans Discounted, Jharkhand, Rahul Gandhi
× RELATED ஈமக்கிரியை நிகழ்ச்சி: ஜார்க்கண்ட்...