ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக 30 யானைகள் முகாமிட்டு இருந்தன. இந்நிலையில், தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து 70க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஓசூர் வனப்பகுதிக்கு வந்தன. இதனால் சானமாவு வனப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு அங்குள்ள கிராம பகுதிக்கு சென்று பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், யானைகள் சேதப்படுத்தியது போக, மீதமுள்ள நெல், ராகி பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்ய துவங்கினர். மீண்டும் யானைகள் வராமல் இருக்க உடனடியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.