சென்னை: உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆலோசனை நடத்தினார். உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட அளவில் இடபங்கீடு குறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவருடன் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: குடியுரிமை சட்டம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் விவாதித்தோம். நாட்டை மதரீதியாக பிளவுபடுத்தி வரும் மோடி அரசை எதிர்கொள்வது குறித்து பேசினோம். இந்த சட்ட திருத்தத்தில் இலங்கை தமிழர்களையும் விலக்கி வைத்திருப்பது குறித்து விவாதித்தோம். இந்த இரண்டு விஷயங்களை பிரதானமாக பேசினோம்.