×

நிர்பயா குற்றவாளியின் மறுபரிசீலனை மனு மீது17ம் தேதி விசாரணை

புதுடெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளி அக்‌ஷய் குமார் சிங்கின் மறுபரிசீலனை மனுவை உச்ச நீதிமன்றம் வரும் 17ம் தேதி விசாரிக்கிறது. டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் கடந்த 2012ம் ஆண்டு, ஓடும் பஸ்சில் ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு ரோட்டில் வீசப்பட்டார். சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். நிர்பயா என பெயரிடப்பட்ட அந்தப் பெண்ணின் பலாத்கார கொலை வழக்கில் 5 குற்றவாளிகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் விதித்த மரண தண்டனை உச்ச நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு உறுதி செய்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவன், சீர்திருத்த பள்ளியில் 3 ஆண்டு தண்டனை முடித்ததால் விடுவிக்கப்பட்டான். ராம் சிங் என்ற குற்றவாளி டெல்லி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.

முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோரின் மறுபரிசீலனை மனுக்களை உச்ச நீதிமன்றம் கடந்த 17ம் தேதி நிராகரித்தது. அக்‌ஷ்ய் குமார் சிங் என்ற குற்றவாளி மட்டும், உச்ச நீதிமன்றத்தில் தற்போது மறுபரிசீலனை மனு தாக்கல் செய்துள்ளான். அதில் அவனுடைய வக்கீல், ‘‘டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் மனிதனின் ஆயுட் காலம் குறைந்து வரும்போது, மரண தண்டனை எதற்கு? என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் வரும் 17ம் தேதி விசாரணைக்கு வருகிறது.


Tags : plea review hearing , Nirbhaya is guilty, reconsidered, investigated
× RELATED டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...