ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் 5 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்து வருகிறது. கடந்த மாதம் 30ம் தேதி முதல் கட்டத் தேர்தலும், இம்மாதம் 7ம் தேதி 2ம் கட்டத் தேர்தலும் நடந்தது. 3ம் கட்டத் தேர்தல் நேற்று நடந்தது. பலத்த பாதுகாப்புடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ராஞ்சி, ஹடியா, கான்கே, பார்கதா, ராம்கரில் மாலை 3 மணி வரையும், இதர தொகுதிகளில் மாலை 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடந்தது. மக்கள் உற்சாகத்துடன் வாக்களித்தனர். கவர்னர் திரோபாடி, முர்மு ராஞ்சி வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்தார்.