இடாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் 12 கி.மீ. தொலைவு ஊடுருவியதாக பாஜ மூத்த தலைவர் தபீர் காவ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தின் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களில் ஒன்றான திபாங்கில் அன்ரெல்லா பள்ளத்தாக்கு பகுதிக்கு உட்பட்ட இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் 12 கி.மீ ஊடுருவி வந்துள்ளதாக தபீர் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அவர்கள் ஊடுருவி இருக்க கூடும் என்று அவர் கூறினார். இதைத் தொடர்ந்து தபீர் காட்டிய புகைப்படங்கள், வீடியோவில், `திபாங் மாவட்டத்தின் கடைசி எல்லைப் பகுதியான அன்ரெல்லா பள்ளத்தாக்கு வனப்பகுதியில் சீனாவின் எல்லைப் பகுதி என்ற பேனர் கட்டப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் சீன கொடியுடன் நின்றிருந்த சீன ராணுவத்தினர்,