காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வெள்ளைகேட் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் மரம் வளர்ந்துள்ளதால் விரிசல் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் வெள்ளைகேட் பகுதியில் பஸ் மற்றும் ரயில் தண்டவாளங்களை கடப்பதற்கு வசதியாக மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை முறையாக பராமரிக்காமல் உள்ளதால் சேதம் அடைந்து வருகிறது. தற்போது பாலத்தில் ஆங்காங்கே அரச மரம், ஆலமரம் வளர்ந்துள்ளதால் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.