உலகின் மிகப்பெரிய பாய்மர கப்பல்

உலகின் மிகப்பெரிய பாய் மரக் கப்பல்கள் ரஷ்யாவின் கலினின்கிரேடு துறைமுகத்தில் இருந்து தங்கள் பயணத்தை தொடங்கியுள்ளன.இந்த பயணத்தில் ரஷ்யாவின் மேலும் இரண்டு கப்பல்கள் வழியில் இணைந்து கொள்ள உள்ளன. அண்டார்டிகாவை ரஷ்ய மாலுமிகள் கண்டுபிடித்து 200 ஆண்டுகளானதை அவர்கள் கொண்டாடும் வகையில் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

இரண்டாம் உலகப்போரின் 75வது ஆண்டு வெற்றிவிழாவாகவும் இது கொண்டாடப்படுகிறது. அமெரிக்க, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் 40 துறைமுகங்களுக்கு இந்த கப்பல்கள் பல மாதங்கள் பயணம் செல்ல உள்ளன. இதில் ஏராளமான பெண்களும் கப்பலின் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories: