அரியலூர்: கீழப்பழூவூர் அருகே லாரியை முந்தி செல்ல முயன்றபோது சாலையோர பள்ளத்தில் மினிபஸ் கவிழ்ந்து 8 பயணிகள் காயமடைந்தனர்.அரியலூர் மாவட்டம் சின்னப்பட்டாகாடு கிராமத்தில் இருந்து நேற்று காலை கீழப்பழுவூரை நோக்கி மினி பஸ் வந்தது. இந்த பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். கீழப்பழூவூர் அருகே பேருந்தின் முன் சுண்ணாம்பு கல் ஏற்றி கொண்டு கனரக லாரி சென்றது. கீழப்பழுவூர் சத்தியாநகர் அருகில் லாரியை மினி பஸ் டிரைவர் ஓவர்டேக் செய்ய முயன்றார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் மினிபஸ் கவிழ்ந்தது.