தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்கள் கையில் மனிதக்கழிவுகளை அகற்றும் வீடியோ வைரலாக பரவிவருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி பேரூராட்சியில் 30ஆயிரத்தும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில் சாக்கடை சுத்தம் செய்தல், கொசு மருந்து தெளித்தல் உள்ளிட்ட எந்த ஒரு சுகாதார பணிகள் சரிவர நடைபெறுவதில்லை என புகார் எழுந்து வந்தது.