கையால் மனிதக்கழிவுகளை அகற்றும் பணியாளர்கள்: வைரல் வீடியோவால் பரபரப்பு

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்கள் கையில் மனிதக்கழிவுகளை அகற்றும்  வீடியோ வைரலாக பரவிவருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி பேரூராட்சியில் 30ஆயிரத்தும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில் சாக்கடை  சுத்தம் செய்தல், கொசு மருந்து தெளித்தல் உள்ளிட்ட எந்த ஒரு சுகாதார பணிகள் சரிவர நடைபெறுவதில்லை என புகார் எழுந்து வந்தது.

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் கெங்குவார்பட்டியில் துப்புரவு பணியாளர்கள் சிலர் மனித கழிவுகளை கையால் அகற்றுவதாக வீடியோ  ஒன்று வைரலாக பரவி வந்தது. இதனால் பேரூராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது கோபமாக இருந்தது. மேலும் அதிகாரி ஒருவர் இது  குறித்து சம்பந்தப்பட்ட பணியாளரிடம் எழுத்துப்பூர்வமாக எழுதிவாங்கியதாக கூறப்படுகிறது.எனவே, மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி நடவடிக்கை  எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: