பண்ருட்டி: பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் ஏராளமான நபர்கள் மாட்டு வண்டிகளில் அரசு அனுமதியின்றி மணல் எடுத்து செல்கின்றனர். கரையோரத்தில் மணல் எடுப்பதால் அதிகளவு பள்ளம் ஏற்பட்டு ஆற்றின் கரை உறுதிதன்மை இழந்து வருகிறது. இந்த ஆற்றின் அருகே கொக்குப்பாளையம் பகுதியில் விவசாயிகள் நீராதாரம் காப்பாற்ற செக் டேம் கட்டப்பட்டது. இதன் அருகில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்கு கரைகள் பலப்படுத்தப்பட்டது. ஆனால் மணல் அள்ளுபவர்கள் செக் டேமின் அருகிலேயே அதாவது 100 மீட்டருக்குள்ளாகவே மணல் அள்ளுகின்றனர்.