டோலியில் தூக்கி வந்தபோது கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது

வேலூர்: வேலூர் மாவட்டம், ஊசூர் அருகே அத்தியூர் அடுத்த சிவநாதபுரம் மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் உயரத்தில் உளள குருமலையை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி த்ருதி(19). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவ வசதியில்லாததால் மலைவாழ் மக்கள் சிகிச்சை அளித்தும் குழந்தை பிறக்கவிலலை. அவரை டோலி கட்டி மலையிலிருந்து கீழே தூக்கி சென்றனர். பாதி வழியை கடந்தபோது, ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்பூலன்சுடன் வட்டார மருத்துவ அலுவலர் சசிகுமார் தலைமையில் வந்த மருத்துவக்குழுவினர் மலை பாதையிலேயே த்ருதிக்கு பிரசவம் பார்த்தனர். இதில், அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயையும், சேயையும் ஆம்புலன்ஸ் மூலம் ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

Related Stories: