தேனி: நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தது தொடர்பாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் உதித்சூர்யா மற்றும் இவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் மற்றும், சென்னை, தர்மபுரி கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், அவர்களது தந்தை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மாணவர்கள் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவக்கல்லூரிகளில் சேர இடைத்தரகராக செயல்பட்ட தர்மபுரியை சேர்ந்த புரோக்கர் ஆறுமுகத்தை, சிபிசிஐடி போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். இவர் ஜாமீன் கேட்டு தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வம், அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டார்.