புதுடெல்லி: ‘மகாகவி பாரதியாரின் எண்ணங்களும், பணிகளும் இன்றைக்கும் நமக்கு எழுச்சியூட்டுகின்றன,’ என பிரதமர் மோடி தமிழில் டிவிட் செய்துள்ளார். பாரதியாரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமர் மோடி தனது டிவிட்டரில் தமிழிலும், ஆங்கிலத்திலும் பாரதியாரை புகழ்ந்து டிவிட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாளன்று அவரை நினைவு கூர்கிறேன். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர்.