புதுடெல்லி: ‘‘குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை பற்றி நமது நாட்டு எதிர்க்கட்சிகள் பாகிஸ்தானைப் போல பேசுகின்றன,’’ என பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் பாஜ எம்பி.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: குடியுரிமை சட்டத் திருத்தம், இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. மதரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வந்தவர்களுக்கு இந்த சட்டம் நிரந்தரமான பாதுகாப்பை அளிக்கும். இந்த சட்ட திருத்தத்தை பற்றி நமது நாட்டு எதிர்க்கட்சிகள் பாகிஸ்தானைப் போல பேசுகின்றன.
எனவே, இந்த குடியுரிமை மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதோடு நின்று விடாமல், அந்த சட்டம் பற்றிய கட்டுக்கதைகளை பாஜ எம்பிக்கள் தகர்க்க வேண்டும்.