வேளச்சேரி: மேடவாக்கம், விஜிபி புஷ்பா நகர், சந்தோஷ் தெருவில் திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேடவாக்கம், விஜிபி புஷ்பா நகர், சந்தோஷ் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி மீனா (27). இருவருக்கும் கடந்த மாதம் 3ம் தேதி சேலம் மாவட்டம் அந்தியூரில் திருமணம் நடந்தது. ராமலிங்கம் சிறுசேரி உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.