தண்டையார்பேட்டை: காவல் துறையில் உதவி ஆய்வாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி வாலிபரிடம் 5 லட்சம் பணம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஓய்வுப்பெற்ற எஸ்.ஐயை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் கார்த்திக் (30). கடந்த 2015ம் ஆண்டு சென்னை மண்ணடியை சேர்ந்த இளம்தமிழன் என்பவர் மூலம் மணலி காவல் நிலைய உதவி ஆய்வாளரான குடியாத்தம் பகுதியை சேர்ந்த மோகன் (62) அறிமுகமாகி உள்ளார். அப்போது மோகன் 4 லட்சம் கொடுத்தால் காவல் துறையில் உதவி ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக கார்த்திக்கிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய கார்த்திக் 4 லட்சம் பணத்தை மோகனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் மோகன் வேலை வாங்கித்தராமல் காலம் கடத்தி வந்ததால் கார்த்திக் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதில் ₹3 லட்சம் பணத்தை கொடுத்து விட்டு மீதி பணத்தை தராமல் இழுத்தடித்ததாக தெரிகிறது.