ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்டில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன் எடுத்துள்ளது. ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற இலங்கை அணி பேட் செய்ய முடிவு செய்தது. தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய கேப்டன் கருணரத்னே, ஒஷதா பெர்னாண்டோ சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்தனர். கருணரத்னே 59 ரன், ஒஷதா 40 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.